For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு” - பாஜக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு தமிழ்நாடு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.
04:28 PM May 13, 2025 IST | Web Editor
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு தமிழ்நாடு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.
”பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு”   பாஜக வரவேற்பு
Advertisement

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாட்சி பாலியல் வன்கொடுகை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 9 பேருக்கு கோவை மகிளா நீதிமன்றம் இன்று சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை திமுக, அதிமுக, தவெக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்றும் வரும் நிலையில், தற்போது பாஜகவும் வரவேற்றுள்ளது.

Advertisement

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  “கோவை மகிளா நீதிமன்றம் இன்று(மே.13) வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேரையும் சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கினார்.

பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.

பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றாவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement