அடுக்கு மாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு - போலீசார் விசாரணை!
அரியலூர் நகரில் உள்ள அரசு கலைக்கல்லூரி சாலையில் அடுக்கு மாடி
குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது தளத்தில் பாப்பா (வயது 44) வசித்து வந்தார். பழைய துணி வாங்க வந்த பெண் ஒருவர் இன்று காலை இவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, பாப்பா தனது வீட்டில் உயிரிழந்தது கிடந்ததை பார்த்து அந்த பெண் (பழைய துணி வாங்க வந்த பெண்) அதிர்ச்சியடைந்தார்.
இதையும் படியுங்கள் : ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த மூதாட்டி – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!
உடனடியாக அவர் அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சோதனை செய்தனர். மேலும், அவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததுடன், வீட்டின் கதவும் திறந்திருக்கிறது.
மேலும், அவர் தரையில் பிணமாக கிடப்பதை பார்த்தால் யாரோ அடித்து கொலை செய்தது போல் இருந்ததாக கூறப்படுகிறது. உடல் அழுகிய நிலையில் உள்ளதால் உடற்கூராய்வுக்கு பிறகே உயிரிழப்புக்கான காரணத்தை கூற முடியும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.