For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
06:01 PM Jun 22, 2025 IST | Web Editor
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு
Advertisement

இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அமைக்கப்பட்ட முருகனின் அறுபடை மாதிரி வீடுகளை பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், இன்று(ஜூன்.22) முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி உள்ளது.

Advertisement

மாநாட்டுக்கு இந்து முன்னணி அமைப்பினர், பாஜக தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என பலர் பங்கேற்று வரும் நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் தற்போது மாநாட்டில் பங்கேற்றுள்ளர். லட்சகணக்காணோர் இம்மாநாட்டிற்கு பல்வேறு பகுதியில் இருந்து வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிந்துள்ளார். இம்மாநாட்டிற்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த 20 பேர் கொண்ட நபர்கள் வேனில் மேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, கவிதா (55) என்ற பெண்ணுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கவிதா  உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர் கவிதாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

Tags :
Advertisement