"பவன் கல்யாணக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்" - அமைச்சர் சேகர்பாபு கேள்வி?
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ராஜா தோட்டம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகளின் இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பெரியார் நகர் பொது நூலகத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகம் மற்றும் ஜவகர் நகர் பகுதியில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்தையும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "படைப்பகம் பணிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு உள்ளாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வடசென்னை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 9 இடங்களில் இந்த படைப்பகம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது ஒப்பந்தம் கூறப்பட்டுள்ளது அடுத்த மாதம் இறுதிக்குள்ளாக அந்த பணிகளை துவக்கி வைக்க உள்ளோம்.
தென் சென்னனையில் ஆறு இடங்களில் இது போன்ற படைப்பகம் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அதுவும் முடிவடைந்துள்ளது தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அதனை தொடங்கி வைத்துள்ளார் அந்த பணிகள் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்கு உள்ளாக பயன்பாட்டிற்கு வரும்.
இந்த படைப்பகத்தின் நோக்கமே எல்லோருக்கும் எல்லாம் தமிழக முதல்வரின் சித்தாந்தத்தின் அடிப்படையில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மாணவர்களுக்கும் வீட்டில் போதிய வசதி இல்லாமல் இருக்கும் படிக்கின்ற சூழலே இல்லாத மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக முதல்வர் கொண்டு வந்த இந்தத் திட்டத்தால் படைப்பகம் தொடங்கப்பட்டு ஆறு மாதம் கூட நிறைவு பெறவில்லை ஆறு மாணவர்கள் இந்த முறை நடந்த டிஎன்பிசி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருகர் மாநாடு ஆன்மீகவாதிகளால் நடத்தப்படும் மாநாடு என நயினார் நாகேந்திரன் கருத்து குறித்த கேள்விக்கு, ஆந்திராவில் இருக்கும் பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உத்தரப்பிரதேசத்தின் யோகிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் இந்து சமய அறநிலைத்துறை என்பது அறம் சார்ந்த ஒரு துறை அறம் என்றாலே திருக்கோயில்களின் பணிகளை போதிப்பது மனிதனை ஒழுக்கப்படுத்துவது ஆனால் இவர்கள் நடத்துகின்ற இந்த மாநாடு இனத்தால் மதத்தால் மொழியால் பிளவுபடுத்துகின்ற சூழலை ஏற்படுகின்ற மாநாடு.
இறை அன்பர்களுக்கு தேவையான அனைத்தையும் இந்த துறை நிறைவேற்றுவதால் தான் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு 117 முருகன் திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம் 136 முருகன் கோயில்களை குடமுழுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். பெருந்திட்ட வரைவின் காரணமாக எடுத்துக்கொண்ட 846 பணிகள் 1446 கோடி ரூபாய் செலவில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முருக பக்தர்களுக்கு அதிசயிருக்கின்ற வகையில் திருப்பனியை மேற்கொண்டு வருகிறோம்.
பழனியை சென்று பாருங்கள் அங்கு எவ்வளவு ரம்யமான சூழல் நிலவுகிறது திருச்செந்தூரில் நான் ஒரு கோடி ரூபாய் செலவில் இன்றைக்கு குடமுழுக்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றத்தில் அடுத்த மாதம் 14ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகனுக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது ஆகவே இது போன்ற மக்களை பிளவுபடுத்துகின்ற ஒரு சாராரை வைத்து நடத்துகின்ற மாநாடுகள் தேவையற்றது.
இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம் 2026 யில் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார் என்ற கேள்விக்கு, ஏற்கனவே அவர்கள் வேலை கையில் எடுத்து சுற்றி சுற்றி பார்த்தார்கள் அதன் பிறகு கிடைத்த விடை என்னவென்றால் பூஜ்ஜியம் தான் இந்த ராஜ்ஜியத்தை ஆளக்கூடிய சக்கரவர்த்தி எங்களுடைய முதல்வர் தான் அவர் பக்கத்தில் தான் தமிழ் கடவுள் முருகன் நின்று கொண்டிருக்கிறார்.
வடசென்னை பகுதியில் குடிநீர் ஏடிஎம்கள் சரிவர இயங்கவில்லை என்ற கேள்விக்கு, உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது எப்போதுமே ஒரு திட்டம் தொடங்கப்படுகிறது என்றால் சிறு சிறு குறைபாடுகள் இது போன்ற சச்சரவுகள் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும் எந்தவிதமான குறைகள் இருந்தாலும் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ளாமல் சுட்டிக் காட்டுகின்ற குறைகளையும் நிறைவு செய்வோம். காலையிலேயே எங்கள் கவனத்திற்கு வந்தது உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அனுப்பி அந்த குறைகள் சரி செய்யப்பட்டு விட்டது.
அம்மா குடிநீர் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளீர்கள் என அதிமுகவினர் விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு, மக்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் மக்களின் தீர்ப்பு விட்டு விடுகிறோம் எங்கு இதுபோன்று அம்மா குடிநீர் திட்டத்தை இவர்கள் உருவாக்கினார்கள் அவர்கள் சுட்டிக் காட்டினால் அதற்கு தகுந்த விடையளிக்க உள்ளோம் இது நல்ல திட்டம் 50 இடங்களில் இது வைக்கப்பட்டுள்ளதால் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது மேலும் கூடுதலாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆகவே இது சிறப்பான திட்டம் ஏற்கனவே
இது போன்ற திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி இருந்தால் வாழ்த்துகிறோம் வரவேற்கின்றோம்.
திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என வைகை செல்வன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, "திமுக கூட்டணி உறுதிமிக்க கப்பலை போன்றது. இந்த கப்பலை செலுத்துகின்ற மாலுமி பல்வேறு பூகம்பங்கள், புயல், மின்னல் உள்ளிட்டவை சந்தித்து திமுக என்ற கப்பலை கரைக்கு கொண்டு வந்து ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியின் நீட்சி தொடரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திறமை மிக்க இந்த மாலுமியால் எப்படிப்பட்ட கடல் முரணாக இருந்தாலும் கடல் அன்னையை அரணாக்கி இந்த ஆட்சி தொடர்வதற்கு எல்லாம் வல்ல முருகன் எங்கள் முதல்வருக்கு துணையாக இருப்பார்".