For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்" - ஆம்ஸ்ட்ராங் படுகொலை விஷயத்தில் கொந்தளித்த விஜய்!

08:53 AM Jul 06, 2024 IST | Web Editor
 சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்    ஆம்ஸ்ட்ராங் படுகொலை விஷயத்தில் கொந்தளித்த விஜய்
Advertisement

 தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று ( ஜூலை 5 ) சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவில், “ "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்  ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement