கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் நீரால் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11:36 AM Oct 10, 2025 IST | Web Editor
Advertisement
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 1290 கனஅடி நீர் வரத்தாக இருந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் 1290 கன அடி நீர் திறக்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில் இன்றும் அணைக்கு வினாடிக்கு 4000 கனஅடி நீர் வரத்தாக உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வரத்தாக உள்ள 4000 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 44.28 அடிகளில் 41.33 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றங்கறையோரமாக உள்ள கிராம மக்களுக்கு வருவாய் துறையினர் பாதுகாப்பாக இருக்குமாறும் ஆற்றைக்கடக்கவோ, நீரில் இறங்கவோ வேண்டாமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.