For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா அரசு விழாவாக நடக்க வேண்டும்; இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தல்!

விநாயகர் சதுர்த்தி விழா முழு சுதந்திரத்துடன் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
04:17 PM Jul 24, 2025 IST | Web Editor
விநாயகர் சதுர்த்தி விழா முழு சுதந்திரத்துடன் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா அரசு விழாவாக நடக்க வேண்டும்  இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தல்
Advertisement

Advertisement

கும்பகோணத்தில் உள்ள பகவத் விநாயகர் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் நேற்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். இந்த வழிபாட்டின்போது, வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழக அரசு எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் விதிக்காமல், முழு சுதந்திரத்துடன் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழக அரசு ஒரு அரசு விழாவாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய முன்வர வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக, அரசு விதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்த விழாவை முழுமையாகக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலை வைப்பதற்கான அனுமதி, ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் என பல தடைகள் விதிக்கப்படுகின்றன. இது மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது.

இதனால், இந்த ஆண்டு அரசு எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்காமல், விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு முன்வர வேண்டும். இதன் மூலம், அனைத்து மக்களும் மத நல்லிணக்கத்துடன் விழாவைக் கொண்டாட முடியும்" என்று தெரிவித்தனர்.

இந்த சிறப்பு வழிபாட்டில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Tags :
Advertisement