For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு!

11:57 AM Jun 15, 2024 IST | Web Editor
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்   பாமக வேட்பாளராக சி அன்புமணி அறிவிப்பு
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

வேட்புமனுதாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 21 ஆகும்.   வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-இல் நடைபெறும்.  மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26 பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் உள்ளதால்,  அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.  இதனைத் தொடர்ந்து,  ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதேபோல  நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் பாமக சார்பில் சி.அன்புமணி  போட்டியிடுவார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.  2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட சி. அன்புமணி மீண்டும் தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement