For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒரு காவலர் MLAவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ - உண்மை என்ன?

MLAவின் காரை வழிமறித்த காவலர் என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது
01:47 PM Feb 24, 2025 IST | Web Editor
ஒரு காவலர் mlaவின் காரை தடுத்து நிறுத்தியதாக பரவும் வீடியோ   உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘PTI

Advertisement

காவலர் ஒருவர், கருப்பு நிறக் கண்ணாடிகள் இருந்ததால் காரை தடுத்து நிறுத்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகும் வீடியோவில், காரின் அருகே நின்ற ஒருவர் எம்.எல்.ஏ என்று கூறப்படுகிறது.  இது தொடர்பாக அதிகாரியிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த காவலர் "நீங்கள் என்னை இடைநீக்கம் செய்யலாம், ஆனால் நான் அவரை காரை எடுத்துச் செல்ல விடமாட்டேன்" என்று கூறுகிறார். பயனர்கள் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு போலீஸ்காரரைப் பாராட்டி வருகின்றனர். பிடிஐ உண்மைச் சரிபார்ப்பு மையம் விசாரித்து, இந்த வைரல் கூற்று போலியானது என்பதைக் கண்டறிந்தது. எங்கள் விசாரணையில், இந்த வைரல் காணொலி திருத்தப்பட்டது என்பதும், பயனர்கள் அதை உண்மையானது என்று நம்பி தவறான கூற்றுகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.

பிப்ரவரி 12, 2025 அன்று  பேஸ்புக்கில் வைரலான காணொளியைப் பகிர்ந்த அனுராக் திவாரி எனும் பயனர் “இது வெறும் ரீல் அல்ல, இந்த காணொலி செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து சில லஞ்சங்களுக்காக அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிக்கும் காவல்துறை நிர்வாகத்தின் சீர்கேட்டிலிருந்து ஒரு விதிவிலக்கு. நாட்டிற்கு இப்படிப்பட்ட போலீசார் தேவை.  எம்.பி.க்களாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் சரி, யாரையும் காவல்துறை கேள்வி கேட்க மாட்டார்கள். “சல்யூட் சர் ஜி” என பதிவிடப்பட்டது. பதிவின் இணைப்பு , காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காணலாம். 

இதேபோல ’யூத் இந்தியா பாரத்' என்ற மற்றொரு X பயனர் பிப்ரவரி 12, 2025 அன்று வைரலான வீடியோவைப் பகிர்ந்து, "நாட்டிற்கு இதுபோன்ற போலீசார் தேவை, அது ஒரு எம்பியாக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, யாரும் கேட்க மாட்டார்கள், நீங்கள் இடைநீக்கம் செய்ய விரும்பினால், அதைச் செய்யுங்கள், நீங்கள் ராஜினாமா செய்ய விரும்பினால், இப்போதே அதை எடுங்கள்... சல்யூட் ஐயா ஜி" என்று எழுதினார். இடுகை இணைப்பு, காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காண்க.

உண்மை சரிபார்ப்பு : 

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, PTI உண்மைச் சரிபார்ப்பு மையம், வைரல் காணொலியின் முக்கிய பிரேம்களைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை நடத்தியது, அதில் பிப்ரவரி 6, 2025 அன்று மான்டி தீபக் சர்மாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வைரல் காணொலியைக் கண்டறிந்தோம். வீடியோவின் 16வது வினாடியில் உள்ள மறுப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளபடி, இந்த காணொளி மான்டி தீபக் சர்மாவால் உருவாக்கப்பட்டது.

இந்த காணொலி வெறும் கற்பனையே, எந்த ஒரு வர்க்கம், பிராந்தியம் அல்லது வெவ்வேறு தொழில்களைச் சேர்ந்த மக்களை எந்த வகையிலும் அவமரியாதை செய்யவில்லை. இந்த காணொலி பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. வீடியோ மற்றும் ஸ்கிரீன்ஷாட்களுக்கான இணைப்பை இங்கே காண்க.

மான்டி தீபக் சர்மாவின் யூடியூப் சேனலைத் தேடினோம். அந்த காணொலியில் இருந்த மற்றவர்களின் பல காணொலிகளை நாங்கள் கண்டறிந்தோம்.  அடுத்த கட்ட விசாரணையில், மான்டி தீபக் சர்மாவின் சமூக ஊடகக் கணக்குகளைத் தேடினோம். மோன்டி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் தன்னை டிஜிட்டல் மற்றும் வீடியோ படைப்பாளராக விவரித்துள்ளார். மோண்டியின் சமூக ஊடகக் கணக்குகளில், பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்ட நிறைய வீடியோக்களைக் கண்டோம். பதிவின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காணலாம்

முடிவு : 

எங்கள் விசாரணையில், வைரலான காணொளி உண்மையானது அல்ல, மாறாக ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. சமூக வலைதள பயனரான மான்டி தீபக் சர்மா இதை பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கியுள்ளார் என்பது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement