Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அண்ணாமலை என்ற வேதாளம் அதிமுகவை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது -ஜெயக்குமார் பேட்டி!

11:20 AM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

அண்ணாமலை என்ற வேதாளம் தற்பொழுது அதிமுகவை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை
முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  உடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
பேசியதாவது:

”மாவீரர் அழகுமுத்துக்கோன் வெள்ளையனுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
வெள்ளையனுக்கு அடிபணியாமல் வாழ்ந்த முதல் வீரர் அழகு முத்து கோன் தான். அழகு முத்து கோனை சிறை பிடித்துத் துன்புறுத்திக் கட்டாயப்படுத்தி,
தன்னுடன் இருக்கும் நபர்களை காட்டிக்கொடுக்க வேண்டும் என கூறியும் தன் தலையை
போனாலும் சரி காட்டிக் கொடுக்காக்காமல் அந்த துரோகத்தை நான் செய்ய மாட்டேன் என கூறினார். வீரனாகப் பிறந்து வீரனாகவே வாழ்ந்தார்.

ஓபிஎஸ் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குத்
துரோகத்தை செய்துள்ளார். ஓபிஎஸ் புரட்சித்தலைவி அம்மாவால் அறிமுகப்படுத்தவிட்டவர் கிடையாது. TTV இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது. பொறுப்பு கொடுத்த கட்சி அலுவலகத்தையே சென்று இடித்து உடைத்திருக்கிறார். கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் அவரிடம் கிடையாது.

கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி கட்சி இணைக்க முடியும்? அது முழு சோற்றில்
பூசணிக்காயை மறைப்பதற்குச் சமம்.  ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்தது தான் 90 சதவீதம் இணைப்பு என்று சசிகலா கூறுகிறார். அதிமுக தொண்டர்களின் ரத்தத்தைக் குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகிறது. ஒரு
தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்படுகிறார். முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றுவது பிரச்சனைக்கு தீர்வு இல்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாற்றினால் தான் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்.

அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது.  லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல. இன்று சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள். இஸ்லாமியர்கள் லுங்கி அணிகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள். எனவே அது அவமரியாதைக்குரிய செயல் அல்ல. நான் பெரும்பாலும் வேட்டி அணிந்து தான் தான் பேட்டி கொடுப்பேன்” என தெரிவித்தார்.

Tags :
AIADMKAnnamalaiBJPJayakumar
Advertisement
Next Article