Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

04:42 PM Mar 31, 2024 IST | Web Editor
Advertisement

“இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” என இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.

Advertisement

‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. 

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளன. மேலும் பல்வேறு எதிர்க்கட்சிகள், மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளால் புதிய நெருக்கடிகளை சந்திப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா, விசிக தலைவர் திருமாவளவன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பிற இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,

“இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மியும், கெஜ்ரிவாலும் இணைவார்கள் என்று பாஜக நினைக்கவில்லை. இந்தியா கூட்டணியில் கெஜ்ரிவால் இணைந்ததால் தான் மத்திய பாஜக அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி இங்கு கூடியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்திய மக்களுக்கும் சங்பரிவாருக்கும் இடையே நடக்கும் போர் இது” என தெரிவித்தார்.

Tags :
AAPArrestArwind KejriwalDelhiDelhi high courtDelhi liquor policy caseDMKEnforcement DirectorateINDIA AllianceINDIA Alliance RallyLoktantra Bachao Maha RallyNews7Tamilnews7TamilUpdatesPetitionrallythirumavalavanVCK
Advertisement
Next Article