For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சோடா பாட்டில் இல்ல... வாக்குகள் தான் பறக்கும்...” - அமரன் பட பாடலை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

09:24 AM Apr 12, 2024 IST | Jeni
“சோடா பாட்டில் இல்ல    வாக்குகள் தான் பறக்கும்   ”   அமரன் பட பாடலை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்
Advertisement

உசிலம்பட்டியில் ‘அமரன்’ பட பாடலை பாடி அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார்.

Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து நடிகர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர்.

அப்போது நடிகர் கார்த்திக் பேசியதாவது :

“எல்லைப் பிரச்னை, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பொழுது விடிந்துவிடும். இது மாற, அனைத்து இடங்களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். நம் கட்சி என ஏன் சொல்கிறேன் என்றால், நானும் அங்குதான் இருக்கேன். இது 4வது தேர்தல். இதிலும் அவர்களுடன் இருக்கிறேன். இங்கு தான் இருப்பேன்.அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் எல்லோரையும் வெற்றி பெறச் செய்து நம்முடைய குரல் மக்களவையில், மாநிலங்களவையில் கேட்க வேண்டும். இந்திய நாடே அதிர வேண்டும். வேட்பாளர் நாராயணசாமியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். உங்களிடமிருந்து தற்காலிகமாக விடைபெறுகிறேன் வெற்றி விழாவில் பங்கேற்பேன்.”

இவ்வாறு நடிகர் கார்த்திக் பேசினார்.

பின்னர் கூடியிருந்த பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘அமரன்’ படத்தில் இடம்பெற்ற ‘வெத்தல போட்ட’ என்ற பாடலை கார்த்திக் பாடினார். அப்போது, பாடலில் வரும் ‘சோடா பாட்டில் பறக்கும்’ என்ற வரிக்கு பதிலாக ‘வாக்குகள் பறக்கும்... இரட்டை இலைக்கு...’ என்று பாடினார். இதனால் சுற்றியிருந்த கட்சி தொண்டர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.

Tags :
Advertisement