ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்.. நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு!
மக்களவை கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் ஜுன் 1-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் ஜுன் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முக்கிய வேட்பாளர்கள்:
- பிரதமர் நரேந்திர மோடி (பாஜக) – உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி
- ரவி கிஷன் (பாஜக) – உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி
- கங்கனா ரனாவத் (பாஜக) – ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதி
- அனுராக் தாகூர் (பாஜக) – இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதி
- மிசா பார்தி (ஆர்ஜேடி) – பீகார் மாநிலம் பாடலிபுத்ரா தொகுதி
- அபிஷேக் பானர்ஜி (டிஎம்சி) – மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பர் தொகுதி
- சரண்ஜித் சிங் சன்னி (காங்கிரஸ்) – பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி
- ஹர்சிம்ரத் கவுர் பாதல் (எஸ்ஏடி) – பஞ்சாப் மாநிலம் பதிண்டா தொகுதி