For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது" - நயினார் நாகேந்திரன்

கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
09:30 PM Oct 23, 2025 IST | Web Editor
கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது    நயினார் நாகேந்திரன்
Advertisement

கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது! கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது என்று திமுக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கிறது. மேலும், இது குறித்துத் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமெனவும், சுற்றறிக்கை அனுப்பத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளையும், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளையும் திருக்கோயில்களுக்கும் இந்து சமய வளர்ச்சிக்கும் பயன்படுத்தாமல், வணிக வளாகம் கட்டும் போர்வையில், நிதியைச் சுரண்டிய திமுக அரசுக்கான அபாய மணியே உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. தங்கள் தீர்ப்பின் மூலம் இந்து சமயக் கோயில்களின் நிதியைக் காத்த உயர்நீதிமன்றத்திற்குத் தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்!"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement