For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் குதித்து உயிரிழப்பு!

06:29 AM Jun 04, 2024 IST | Web Editor
3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் குதித்து உயிரிழப்பு
Advertisement

போரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 3 வயது மகனை ஏரியில் வீசிய சென்ற தந்தை அதே ஏரியில் குதித்து உயிரிழந்துள்ளார்.

Advertisement

தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள சாலையில் நேற்றுமுன் தினம் மோட்டார் சைக்கிளில் சிறுவனுடன் வந்து நின்ற நபர் ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிள் முன்பு அமர வைத்திருந்த சிறுவனை தூக்கி போரூர் ஏரியில் வீசிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.

இதனை அங்கு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்கள் பார்த்துவிட்டு உடனடியாக
ஏரியில் வீசப்பட்ட சிறுவனை நீரில் நீந்தி சென்று உயிருடன் மீட்டனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் போரூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். பொது மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

காவல் துறையினரின்  விசாரணையில் ஏரியில் குழந்தையை வீசிவிட்டு சென்றது தலைமை செயலக காலணியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் என்பது தெரிய வந்தது.  தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை வீட்டில் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தனது 3 வயது மகன் கோபத்தில் தூக்கி வந்து போரூர் ஏரியில் வீசி சென்றது தெரியவந்தது.

பின்னர், சிறுவனின் தாயார் பிரியாவிடம் சிறுவனை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
குடும்ப பிரச்னை காரணமாக பெற்ற மகனை ஏரியில் வீசிவிட்டு சென்ற தந்தையை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதையும் படியுங்கள் : டி20 உலக கோப்பை – இலங்கை அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

இதற்கிடையே நேற்று போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர்
காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சடலமாகக் கிடந்தவர், மூன்று வயது மகனை ஏரியில் தூக்கி வீசிய தந்தை மோகன்ராஜ் என்பது தெரியவந்தது.

ஏரியில் 3 வயது மகனை வீசிவிட்டு சென்ற மோகன்ராஜ், குழந்தையை  ஏரியில்
உயிருடன் வீசியதை எண்ணி மன உளைச்சலில் ஏரியில் குதித்து தற்கொலை
செய்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை
மீட்ட போரூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags :
Advertisement