For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாமகவின் முடிவு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

08:44 AM Mar 19, 2024 IST | Web Editor
பாமகவின் முடிவு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
Advertisement

கூட்டணி தொடர்பாக பாமக எடுத்த முடிவு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் தேதி கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக உடன் பாமக  இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (மார்ச் 19), திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் சென்று கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்தனர். 

பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சேலத்தில்  பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.  இதனையடுத்து, தொகுதி பங்கீடு கையெழுத்திடப்பட்டது. பாமக போட்டியிடும் தொகுதிகள் இன்றே அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. தருமபுரி, அரக்கோணம், திண்டுக்கல், ஆரணி, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“400 வேட்பாளர்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும்.  புரட்சிகரமான அரசியல் மாற்றம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு கொண்டு வருகிறார்.  தமிழ்நாட்டில் மாற்று அரசியலை கொண்டு வரவும், பாமகவுடன் கொள்கை மாறாமல் செயல்பட்டு வருகிறார் பிரதமர்.

தமிழ்நாட்டில் பாமக எடுத்த முடிவு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் மூத்த தலைவராக இருப்பார். இந்த கூட்டணி இந்திய அளவில் வலு சேர்க்கும்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement