Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது, இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
05:45 PM Jun 20, 2025 IST | Web Editor
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது, இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Advertisement

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

Advertisement

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 55 வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.

நூறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது இந்த கல்லூரியின் சிறப்பு தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வருகின்றேன்‌. கடந்த நான்கு ஆண்டுகளில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

கொரோனோ தொற்றை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும் இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Tags :
CengalpattucollegefunctionCoronavirusMinisterMSubramanian
Advertisement
Next Article