Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கடல் போல திரண்ட தொண்டர்களுக்கு நன்றி" - விஜய் நெகிழ்ச்சி!

மதுரை தவெக மாநாட்டின் வெற்றி என்பது, தொண்டர்களின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமானது என தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
06:44 PM Aug 23, 2025 IST | Web Editor
மதுரை தவெக மாநாட்டின் வெற்றி என்பது, தொண்டர்களின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமானது என தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
Advertisement

 

Advertisement

மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் மாநாடு பெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தலைவர் நடிகர் விஜய், தொண்டர்களுக்கு நெகிழ்ச்சியுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "மதுரை தவெக மாநாட்டின் மகத்தான வெற்றி என்பது, நமது தொண்டர்களின் அயராத உழைப்பிலும், அர்ப்பணிப்பான பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமானது. மாநாட்டுக்குத் திரண்ட தொண்டர்களின் கூட்டம், 'மதுரையில் கடல் வந்து புகுந்தது போல' இருந்தது. அந்தப் பிரமாண்டமான காட்சி, என் மனத்தில் கல்வெட்டாகப் பதிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநாட்டில் தான் பேசிய அரசியல் கருத்துகளுக்கும் மக்கள் அளித்த வரவேற்பு குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "கபட நாடகங்கள் மற்றும் பிளவுவாத சக்திகளை அரசியல் மற்றும் கொள்கை அளவில் நின்று நாம் உறுதியாக எதிர்த்ததை, கடல்கள் சேர்ந்து கை தட்டியதைப் போல மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றது, என் மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இந்தக் கடிதம், தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டியும், அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும் எழுதப்பட்டுள்ளது. இந்த வெற்றி, கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்பதையும் இந்தக் கடிதம் சுட்டிக்காட்டுகிறது.

Tags :
MaduraiMaduraiMaanaadutvkvijay
Advertisement
Next Article