For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆன்லைன் சூதாட்டத் தடை: மக்களின் நலனை முன்னிறுத்திய மோடி அரசுக்கு நன்றி" - நயினார் நாகேந்திரன்

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்குநன்றிகளைத் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன் .
09:42 PM Aug 23, 2025 IST | Web Editor
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்குநன்றிகளைத் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன் .
 ஆன்லைன் சூதாட்டத் தடை  மக்களின் நலனை முன்னிறுத்திய மோடி அரசுக்கு நன்றி    நயினார் நாகேந்திரன்
Advertisement

Advertisement

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 'ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025' குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "வருவாயைப் பொருட்படுத்தாது மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தும் மோடி அரசு. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் விதமாக ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-ஐ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியிருப்பது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த மசோதா மிகவும் அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்படும் போன்ற கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய இந்த மசோதாவை நமது மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டால் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான வரி வருவாய் இழப்பு நேரிடும் என்பதைப் பொருட்படுத்தாது, பாரத மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கூறியுள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவு, இளைஞர்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவின் மூலம், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், பொதுமக்களும் பாதுகாப்பான சூழலில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement