For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்காசி பேருந்து விபத்து : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

தென்காசியில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
02:48 PM Nov 24, 2025 IST | Web Editor
தென்காசியில் நிகழ்ந்த பேருந்து விபத்து சம்பவத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தென்காசி பேருந்து விபத்து   முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்
Advertisement

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் பேருந்து விபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement