For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்காசி: சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது!

08:33 AM Apr 01, 2024 IST | Web Editor
தென்காசி  சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது
Advertisement

சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

தென்காசி மாவட்டம் வீகேபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சுரேஷ் என்பவர் காவல்துறையினரைக் கண்டதும் தப்பித்து ஓட முயன்றார். பின்னர் அவரை இரட்டி பிடித்து அவரது இரு சக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது அதில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிய வந்தது.

அந்த நபரிடம் விசாரணை செய்ததில் சுரண்டையில் நாகராஜ் என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகளாகத் தயார் செய்து, அதில் இரண்டு குண்டுகளை மனோ சங்கர் என்பவரிடமும் ஒரு குண்டு கார்த்திக் என்பவருக்கும் கொடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மூன்று குண்டுகளை 30.03.24 அன்று வீராணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ்(34), கார்த்திக்(25) சுரண்டை மனோ சங்கர்(19) மற்றும் சுரண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜா(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
Advertisement