Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது!

08:32 PM Jul 20, 2024 IST | Web Editor
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைதாகியுள்ளார்.

Advertisement

சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் இதுவரை சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி மற்றும் மற்றொரு வழக்கறிஞர் ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ், பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது.

இதையும் படியுங்கள் : அதர்வா நடிப்பில் உருவான டிஎன்ஏ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இந்நிலையில், முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த அருளின் செல்போனில் இருந்த எண்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, ஹரிஹரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய 5 செல்போன் மற்றும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவள்ளூரை சேர்ந்த கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
AIADMKArrestBSPBSPArmstrongbspartyPoliceTamilNadu
Advertisement
Next Article