For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாடு துவங்கியது - விஜயின் வருகை தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது!

'மதுரையில் கடல் இல்லை என யார் சொன்னது? இது தளபதியின் வெற்றிக்கடல்' என கொள்கை பரப்பு செயலாளர் ராஜூ மோகனின் உரையுடன் மாநாடு மதுரையில் கோலாகலமாகத் துவங்கியது.
04:07 PM Aug 21, 2025 IST | Web Editor
'மதுரையில் கடல் இல்லை என யார் சொன்னது? இது தளபதியின் வெற்றிக்கடல்' என கொள்கை பரப்பு செயலாளர் ராஜூ மோகனின் உரையுடன் மாநாடு மதுரையில் கோலாகலமாகத் துவங்கியது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு துவங்கியது   விஜயின் வருகை தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது
Advertisement

கொள்கை பரப்பு செயலாளர் ராஜூ மோகனின் உரையுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கோலாகலமாகத் துவங்கியது. "மதுரையில் கடல் இல்லை என யார் சொன்னது? இது தளபதியின் வெற்றிக்கடல்" என அவர் பேசியது, மாநாட்டு அரங்கையே ஆர்ப்பரிக்கச் செய்தது.

Advertisement

"வெற்றிக் கொடி ஏற்று" போன்ற இசை கோர்ப்புகளுக்குத் தொண்டர்கள் உற்சாகத்துடன் நடனமாடி கொண்டாடினர்.

மாநாட்டு மேடையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அமர்ந்திருந்தனர். பொதுச் செயலாளர் ஆனந்த், கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், அருண் ராஜ் மற்றும் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மேடையில் இருந்தனர். கூடுதலாக, விஜயின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரும் மேடையில் அமர்ந்திருந்தது தொண்டர்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது.

"உங்கள் விஜய் வரேன்" என்ற புதிய மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. இந்தப் பாடலைக் கேட்டவுடன் தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சத்திற்குச் சென்றனர். சிறிது நேரத்தில், மாநாட்டு மேடைக்கு அருகில் வந்து சேர்ந்த விஜய், தொண்டர்களைப் பார்த்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர், விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 300 மீட்டருக்கு அமைக்கப்பட்ட நடைபாதையில், தொண்டர்களை நோக்கி கம்பீரமாக நடந்தபடி மேடைக்கு வந்தார் த.வெ.க. தலைவர் விஜய். அவர் நடந்து வரும்போது, தொண்டர்கள் வீசிய த.வெ.க. துண்டுகளை வாங்கி தனது கழுத்தில் அணிந்துகொண்டார். ஒரு துண்டை மட்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார். பாதுகாப்புக்காக ஸ்பீக்கர்கள் மீது ஏறியிருந்த தொண்டர்களைக் கீழே இறங்கச் சொன்னது, அவரது எளிமையை வெளிப்படுத்தியது.

விஜய் நடந்து வரும் ஒவ்வொரு அடியிலும், தொண்டர்களின் உற்சாகம் ஆரவாரமாகப் பொங்கியது. அவரது வருகை, ஒட்டுமொத்த மாநாட்டு அரங்கையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

Tags :
Advertisement