ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பின் ஜாமின் - உச்சநீதிமன்றம் வழங்கியது!
03:13 PM Apr 02, 2024 IST | Web Editor
Advertisement
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று (02.04.2024) ஜாமீன் வழங்கியது.
டெல்லி கலால் கொள்கையை வகுத்ததிலும், அதனை அமல்படுத்தியதலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடா்ந்து முன்னாள் கலால் துறை அமைச்சரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியவுடன், சஞ்சய் சிங் ஜாமீனுக்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement