For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்!

05:02 PM Aug 13, 2024 IST | Web Editor
tnpsc தலைவராக எஸ் கே பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்
Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வபோது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர், வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement