For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Sivagangai | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு !

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 21 மற்றும் 22 ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
01:35 PM Jan 17, 2025 IST | Web Editor
சிவகங்கை மாவட்டத்தில் வரும் 21 மற்றும் 22 ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
 sivagangai   முதலமைச்சர் மு க ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்தும் பேசி வருகிறார். இதுவரை கோவை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 21 மற்றும் 22ம் தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு செய்கிறார்.

இதற்காக 21-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்று அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை செல்கிறார். தொடர்ந்து 21-ம் தேதி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்பாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதையடுத்து 22-ந் தேதி சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement