For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தையில் திருப்தி - கே.எஸ்.அழகிரி பேட்டி!

04:52 PM Jan 28, 2024 IST | Web Editor
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தையில் திருப்தி   கே எஸ் அழகிரி பேட்டி
Advertisement

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்ததாகவும், 40 தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுகவை எப்படி வீழ்த்துவது என பேசப்பட்டதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisement

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர்.

அவர்கள் நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையேயான பேச்சு வார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அண்ணா அறிவாலயம் வந்தடைந்தது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, “திமுகவுடன் டெல்லியில் இருந்து வந்த தலைவர்கள் பேசினர். பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்தது. 40 தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுகவை எப்படி வீழ்த்துவது என பேசப்பட்டது. 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி என்ற செய்தி பொய்யானது. கூட்டணி கட்சிகளை எப்படி மகிழ்ச்சியாக வைப்பது என்றும் பேசப்பட்டது” இவ்வாறு கூறினார்.

Tags :
Advertisement