For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.4 கோடி விவகாரம் - சிபிசிஐடி விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜர்!

12:25 PM Jul 16, 2024 IST | Web Editor
ரூ 4 கோடி விவகாரம்   சிபிசிஐடி விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜர்
Advertisement

ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். 

Advertisement

சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கெனவே பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், முதன்முறையாக நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்த போது, சென்னை தாம்பரத்தில் கடந்த ஏப். 6-ஆம் தேதி நெல்லை சென்ற விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவக ஊழியர்களிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலர் கேசவ விநாயகம் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது.

கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் ஏற்கெனவே ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று முதல்முறையாக ஆஜராகியுள்ளார்.

Tags :
Advertisement