For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்" - டெல்லி அரசு அதிரடி!

05:12 PM May 29, 2024 IST | Web Editor
 தண்ணீரை வீணடித்தால் ரூ 2000 அபராதம்    டெல்லி அரசு அதிரடி
Advertisement

டெல்லியில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக குடிநீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Advertisement

ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவு வருகிறது. ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லி மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறைத்து விட்டதே இதற்கான காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

டெல்லியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் குடிநீரை வீணாக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடிநீரை வீணாக்கினால் அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கார் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல், போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான குடிநீர் கொஞ்சம் ஏற்பட்டு, இதே போன்ற அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement