For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முறையற்ற வணிக விளம்பரம்: ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

09:03 AM Apr 17, 2024 IST | Web Editor
முறையற்ற வணிக விளம்பரம்  ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ 50 ஆயிரம் அபராதம்
Advertisement

விளம்பரத்தில் கூறியபடி வாடிக்கையாளருக்கு வெங்காயம் வழங்காத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

Advertisement

திருச்சி பழைய பால்பண்ணையைச் சேர்ந்தவர் எம்.சுபாஷ் சந்திரபோஸ். இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியமங்கலத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் பொருள்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது, கடையில் நாளொன்றுக்கு ரூ.2,999 க்குப் பொருள்கள் வாங்கும் ஒரு வாடிக்கையாளருக்கு 2 கிலோ எடையுள்ள தலா 5 பைகள் வெங்காயம் ரூ.1-க்கு வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : ஜாஸ் பட்லர் அதிரடி சதம்! 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!

இதைப் பார்த்த சுபாஷ் சந்திரபோஸ், ரூ.2,999 க்குப் பொருள்களை வாங்கிக் கொண்டு வெங்காயப் பைகளை கேட்டபோது, ரிலையன்ஸ் சந்தை நிறுவன ஊழியர்கள் 2 கிலோ எடையுள்ள ஒரு பையை மட்டும் ரூ.1-க்கு வழங்கியுள்ளனர். கேள்வி கேட்டதற்கு, ஒரு நபர் ஒரு தடவை ரூ. 2,999 க்குப் பொருள்கள் வாங்கினால் ஒரு பை தான் வழங்கப்படும். 5 தடவை ரூ.2,999 க்குப் பொருள்கள் வாங்கினால்தான் 5 பைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று குறைதீர் ஆணையத் தலைவர் ஆர்.காந்தி, உறுப்பினர்கள் சாயீஸ்வரி, ஜெ.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன் விசாரனைக்கு வந்தது.

குறைதீர் ஆணையத் தலைவர் ஆர்.காந்தி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“விளம்பரத்தில் கூறியபடி வெங்காயம் வழங்காத ரிலையன்ஸ் நிறுவனமானது, சேவை குறைபாடு, முறையற்ற வணிகம் மற்றும் தவறான விளம்பரம் செய்ததற்காகவும், நுகர்வோருக்கு மனஉளைச்சலில் ஏற்படுத்தியதற்காகவும் சுபாஷ் சந்திரபோஸுக்கு மீதமுள்ள தலா 2 கிலோ எடையுள்ள 4 வெங்காய பைகள் மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

இதேபோல, விளம்பரத்தைப் பார்த்து ஏமாற்றம் அடைந்த நுகர்வோர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.50 ஆயிரம் அபராதத் தொகையை நுகர்வோர் நல நிதி ஆணையத்தின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இனிமேல் இது போன்ற தவறான விளம்பரங்களை செய்யக்கூடாது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement