For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரி | திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 8 வாகனங்கள் எரிந்து நாசம்!

09:24 PM Dec 06, 2023 IST | Web Editor
புதுச்சேரி   திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 8 வாகனங்கள் எரிந்து நாசம்
Advertisement

புதுச்சேரியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இரு சக்கர வாகனங்கள் மர்மமான முறையில் எரிந்து நாசமாயின. 

Advertisement

புதுச்சேரி,  சேக்கீழார் வீதியில் குமரன் என்பவரது வீட்டின் முன்பு அப்பகுதியில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் 8 மோட்டார் சைக்கிள் மற்றும் 1 சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர்.   இந்நிலையில் அதிகாலை, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.

இதையும் படியுங்கள்: மக்களவையில் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு | வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்!

இதனை தொடர்ந்து வீடுகளில் துாங்கி கொண்டிருந்த மக்கள் வெளியே ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.  தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.  இந்த விபத்தில் 8 பைக்குகளும், ஒரு சைக்கிளும் எரிந்து நாசமானது.  சம்பவம் குறித்து இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement