டெல்லியில் மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் தலைமையில் போராட்டம்!
டெல்லியில் மத்திய அரசுக்கு கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 2 மாநில முதலமைச்சர்கள் உட்பட எம்பிக்கள், அமைச்சர்கள் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு மற்றும் கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு இன்று போராட்டம் நடத்தியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போராட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் . அதேபோல திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்பிக்கள் திருச்சி சிவா, எம்எம்.அப்துல்லாஹ் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு அளிக்கும் விதமாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது..
“ மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்னைகளில், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இவைதான் மாநிலங்களின் உரிமைகள் எவ்வாறு நசுக்கப்படுகின்றன என்பதற்கும், இந்தியா எவ்வாறு ஜனநாயகமற்ற முறையில் 'மாநிலங்களுக்கு மேல் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு உதாரணமாகும்.
இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.