For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் வருகை : மதுரையில் 8 அடுக்கு பாதுகாப்பு!

09:37 AM Jan 21, 2024 IST | Web Editor
பிரதமர் வருகை   மதுரையில் 8 அடுக்கு பாதுகாப்பு
Advertisement

பிரதமர் வருகையையொட்டி, மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 8 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். தமிழ்நாட்டின் சென்னை, திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு செல்கிறார்.

இதையொட்டி, மதுரை விமான நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள கிராம பகுதிகளைச் சுற்றி 8 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. நேற்று திருச்சி சென்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றார்.  இன்று அங்கு தனுஷ்கோடி அரிச்சல் முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்க உள்ளார். அதன்பின், பின் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் செல்லும் இடம், விமானநிலைய வளாகம், பயணிகள் காத்திருப்பு அறை, விமான நிலையம் அருகே உள்ள கிராமம், விமான ஓடுத்தளம், வாகன காப்பகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags :
Advertisement