For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை" - ப.சிதம்பரம்

03:33 PM May 03, 2024 IST | Jeni
 மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை    ப சிதம்பரம்
Advertisement

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து முழுமையாக 365 நாட்கள் கடந்தும், மணிப்பூருக்குச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"மே 3, 2023 மணிப்பூரில் வெடித்த கலவரத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இன்றோடு முழுமையாக 365 நாட்கள் கடந்துவிட்டன;  இன்னும் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்லவதற்கு விருப்பமோ அல்லது அதற்கான நேரத்தையோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை போலும்.  மணிப்பூா் வன்முறையில் பிப்ரவரி 2024 வரை 219 பேர் கொல்லப்பட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்கின்றனர். வீடுகள் இடிக்கப்பட்டன மற்றும் வழிபாட்டுத் தலங்கள் - கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. மாநிலம் கிட்டத்தட்ட இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிர்வாகங்கள் உள்ளன.

ஒன்று மைதேயிக்கு மைதேயி, மற்றொன்று குகிக்கு குகி என பிரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் இன்னமும் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் மேம்போக்காக ஆட்சி செய்யப்பட்டு வருகிறது.  ஆனால் அதன் அதிகாரம் முக்கியமாக மைதேயி மக்கள் வசிக்கும் இம்பாலுக்கு அப்பால் செயல்படவில்லை.  பாஜகவின் உறுதியான 'கிழக்கில் செயல்படும்' கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 'கிழக்கைப் பார்' கொள்கையை விட முன்னேற்றம் என்று கூறப்பட்டது.

இருப்பினும்,  மோடியின் அரசாங்கம் மணிப்பூரின் திசையைப் பார்க்கவோ அல்லது பதற்றமான மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவரவோ மறுத்து விட்டது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355-ஆவது பிரிவு முடமாக உள்ளது.  அரசியலமைப்பின் 356-ஆவது பிரிவு துருப்பிடித்து வருகிறது.

திறமையற்ற மற்றும் மதிப்பிழந்த அரசாங்கம், பெருமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட பெருமைமிக்க அரசை தொடர்ந்து வழிநடத்துகிறது. இதற்கிடையில், மணிப்பூர் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர். மணிப்பூர் மக்களுக்காக நான் வருந்துகிறேன்."

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement