Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினிக்கு அபராதம்!

09:38 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நடிகர் பிரசாந்த்-க்கு சென்னை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.

Advertisement

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில், தற்பொழுது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் ஆகும்.

தற்போது அந்தகன் படத்தின் புரோமோஷன் பணிகளில் பிரசாந்த் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, பிரசாந்த் யூடியூப் சேனலுக்கு இருசக்கர வாகனம் ஓட்டிக்கொண்டு தலைக்கவசம் அணியாமல் தொகுப்பாளினியுடன் நேர்காணல் வழங்கியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இணைய வாசிகள் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி ஆகிய இருவருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Tags :
#GCTPAndhaganHelmetPenaltyPolicePrasanth
Advertisement
Next Article