“ரோடு ஷோ நடத்த மக்கள் வாக்களிக்கவில்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த சசிகலா!
தஞ்சாவூரில் விகே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பேட்டியளித்தார். இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் தமிழ்நாடுதான் லீடர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முதன்மையாக இருந்தது. தற்போதுள்ள முதலமைச்சர் சொல்வது விளம்பரத்துக்காக சொல்வது போல் உள்ளது. வளர்ச்சியில் பின்னால் மாநிலங்கள் தற்போது முன்னேறி உள்ளது. இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள்.
அமித் ஷா தமிழ்நாடு வருகை குறித்த கேள்விக்கு அவர், அவர்களுடைய கட்சி சார்பாக நிகழ்ச்சியில் நடத்துவதற்காக வந்துள்ளார் அவ்வளவுதான் என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், 13வது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக “எங்கெல்லாம் காப்பகம் உள்ளதோ, அது எந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது என அறிந்து அதை கண்காணிப்பது அவசியம். என்பதை இந்த விவகாரத்திற்கு பிறகாவது அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் காவல்துறை பார்க்கிற முதலமைச்சர் சொல்ல வேண்டும் . சும்மா ரோடு ஷோ நடத்துவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை.
2026-ல் அதற்கான சரியான பாடம் கிடைக்கும். திமுக அரசாங்கத்திற்கு முடிவு கட்டுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்யும் வேண்டுமென்றால் இந்த ஆட்சி இருக்கக் கூடாது. அதற்கு உண்டான வேலைகளை தான் நான் செய்கிறேன் அதில் நிச்சயம் வெற்றி பெறுவேன்” இவ்வாறு அவர் கூறினார்.