Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திமுகவை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள்" - மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

திமுகவை தூக்கி எரிய மக்கள் காத்திருக்கிறார்கள் என - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
06:16 PM Jun 08, 2025 IST | Web Editor
திமுகவை தூக்கி எரிய மக்கள் காத்திருக்கிறார்கள் என - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
Advertisement

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது,

"மண்டல, மாவட்ட பகுதியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூளை முடிக்கில் இருந்து வந்து கூடி இருக்கும் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். மதுரை மீனாட்சி அம்மன், சொக்கநாதர், கள்ளழகர், முருகனை வணங்கி உரையை துவங்குகிறேன். தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். மதுரை சாதாரண நகரம் அல்ல, 3000 ஆண்டு பழமையான நகரம். இந்த மண்ணின் நாயகராக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரையும் வணங்குகிறேன்.

வரும் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்ட வேண்டும். பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் மண் மதுரை. இந்த கூட்டமும் ஒரு மாற்றத்தை உருவாக்கும், திமுகவை முடிவிக்கு கொண்டு வரும் மாற்றத்தை உருவாக்கும். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். எந்த நாட்டில் இருந்தாலும், எனது சிந்தனைகள் தமிழ்நாட்டின் மீது தான் உள்ளது. அமித்ஷா வால் எங்களை தோற்கடிக்க முடியாது என தமிழ்நாட்டின் முதலமைச்சர் சொல்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட நாள் அனுபவம், மக்களின் நாடி துடிப்பை அறிந்தவனாக சொல்கிறேன். திமுகவை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள். ஆப்ரேசன் சிந்தூர் வடக்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒரு ஆதரவு குரல் ஒலித்தது அதை நான் உணர்ந்தேன். மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை கொடூரமாக கொன்றவர்களை அவர்கள் ஊருக்குள் சென்று அழித்தாரே அவர் தான் பிரதமர் மோடி. இதற்கு முன்னர் கூட கைவரிசையை காட்டி இருந்தாலும், தற்போது நடைபெற்று இருக்கும் ஆப்ரேசன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வீரத்தையும், தியாகத்தையும் நிரூபித்து காட்டி இருக்கிறது.

பிரதமர் மோடி ஆட்சியில் எல்லா துறையிலும் எப்படி இருக்கிறதோ அதே போல ராணுவத்திலும் தன்னிரைவான நிலை உள்ளது. அதனால் தான் இந்த சாதனை. ட்ரோன்களை வீச துவங்கிய போது அத்துனையையும் அடித்து தூள் தூள் ஆக்கியது நமது இந்திய ராணுவம். ஆப்ரேசன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தாக்குதல் நடத்தினால் மீண்டும் அவர்கள் இடத்திற்கே சென்று அழிக்கப்படுவார்கள். 2024 ஆம் ஆண்டு தான் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார். அதே ஆண்டு தான் ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லியில் மாநிலங்களில் இதுவரை இல்லாத வெற்றியை பதிவு செய்தது.

இதே போல 2026 - ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வர போகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற கூடிய தேர்தலில் தமிழ்நாடு, மேற்கு வங்காளத்திலும் பாஜக ஆட்சியை அமைக்கும். திமுக ஊழல் ஊழல் என ஊழலில் தான் திழைத்துக் கொண்டிருக்கிறது. திமுகவின் ஆட்சி, மத்திய அரசிடமிருந்து ஏழை மக்களுக்காக கொடுக்கப்படும் தொகையை மடை மாற்றி அவர்களுக்கு கிடைக்காமல் செய்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஏழைகள் விலை வாசி ஏற்றத்தாலும், வாழ முடியாத சூழல், மத்திய அரசு திட்டங்கள் கிடைக்க முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 31 ஆயிரத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மார்க்-ல் ஊழல் செய்து ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

100க்கு 100 தோல்வி அடைந்த அரசாக திமுக அரசு உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 90% நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். வேண்டுமென்றால் தேர்தல் வாக்குறுதி புத்தகத்தை எடுத்து வாருங்கள், எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளீர்கள் என கூறுங்கள். தென் தமிழகத்தில் சாதி பிரச்னை, பிரிவினை வாதம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் துன்பத்தில் வாழும் சூழல் உள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இதுபற்றி கொஞ்சம் கூட அக்கரை இல்லை. ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என சொல்லும் துணிச்சல் திமுகவிற்கு வந்துள்ளது.

முருக பக்தர்கள் மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொண்டு நமது வலிமையை காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் வரும் போது நினைவூட்டுகிறேன், உயர்கல்வியை ஏன் தமிழில் மாற்றவில்லை உடனடியாக உயர்கல்வியை தமிழில் கொண்டு வர வேண்டும். தமிழ் நாட்டின் மரபு சின்னமான செங்கோலை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று வைத்தாரே பிரதமர் மோடி, அவருக்கு ஒரு முறையாவது நன்றி சொன்னது உண்டா? பிரதமர் மோடி ஆட்சி துவங்கியது முதல் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. காங்கிரஸ் 10 ஆண்டுகளில் 1 லட்சத்து ஐம்பதாயிரம் மட்டுமே கொடுத்தார்கள்.

ஆனால் பாஜக 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது. உங்களது எண்ணம், செயல்பாடு எல்லாம் திமுக ஆட்சியை எப்போது வீழ்த்த வேண்டும் என்றுதான் இருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து கூட்டணியில் பாஜக தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். பாரத் மாதா கி, வந்தே மாதரம்"

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

 

Tags :
AmitshaBJPDMKLatest NewsMaduraiNews Updatenews7 tamilPolitical News7TN Politics
Advertisement
Next Article