For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி.டி.வி.தினகரனுடன் மீண்டும் ஒன்றாக மேடை ஏறும் ஓ.பன்னீர்செல்வம்!

01:54 PM Feb 17, 2024 IST | Web Editor
டி டி வி தினகரனுடன் மீண்டும் ஒன்றாக மேடை ஏறும் ஓ பன்னீர்செல்வம்
Advertisement

வரும் 24ம் தேதி தேனியில் நடைபெறும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.

Advertisement

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ம் தேதி, கொண்டாடப்படவுள்ளது. இந்த பிறந்த நாளை ஒட்டி தேனியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த பொதுக் கூட்டத்திற்கு ஓபிஎஸ்-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும்,  இந்த அழைப்பினை ஏற்று ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து கலந்து கொள்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பொதுகூட்டத்திற்காக இன்று தேனி மாவட்டம்,  பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை விமர்ச்சையாக கொண்டாட வேண்டும் என்றும், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பின்னர் வரும் 24-ம் தேதி தேனியில் நடைபெறும் கூட்டத்தில் டிடிவி தினகரனுடன்  ஒன்றாக இணைந்து கலந்து கொள்ள உள்ளதாகவும்,  இந்த கூட்டத்திற்கு அதிகளவு கட்சியினைரை திரட்டி வர வேண்டும் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு,  முன்னாள் முதலமைச்சர்ஜெயலலிதா பிறந்த நாளில் தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஒன்றாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement