Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'ஆபரேஷன் சிந்தூர்' : இது வெறும் தொடக்கம் தான் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

'ஆபரேஷன் சிந்தூர்' இது வெறும் தொடக்கம் தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
11:19 AM May 07, 2025 IST | Web Editor
'ஆபரேஷன் சிந்தூர்' இது வெறும் தொடக்கம் தான் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

Advertisement

மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "பாரத தாய் வாழ்க. ஆபரேஷன் சிந்தூர். இது வெறும் தொடக்கம் தான்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
"Operation SindoorGovernorR.N.Ravi
Advertisement
Next Article