For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்!” - அமைச்சர் கீதாஜீவன்!

06:52 PM Mar 12, 2024 IST | Web Editor
“ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள் ”   அமைச்சர் கீதாஜீவன்
Advertisement

“ஒரு கோடியே 16 இலட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகை குஷ்பு, ``தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைப் போட்டால் அவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களிப்பார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் கலைஞர் மகளிர் உதவித் தொகைத் திட்டத்தைத் தாய்மார்களுக்குப் போடும் பிச்சை எனக் குறிப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குஷ்புவின் இந்த கருத்துக்கு ஒரு கோடியே 16 லட்சம் மக்கள் பதிலளிப்பார்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இழிவுபடுத்தி பேசியுள்ளார் குஷ்பு. தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்க்கை நிலை, வாழ்வாதாரம் தெரியாமல் இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. குஷ்புவின் வாழ்க்கை முறை என்னவென்று நமக்குத் தெரியும். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை. நிச்சயமாக ஏழைப் பெண்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரிய வாய்ப்பில்லை. பெண்களுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று அந்த அம்மா சொல்கிறார். 1989இல் சொத்துரிமை, கல்வி உரிமை கொடுத்து பொருளாதார சுதந்திரம் அளித்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதனை எதிர்த்து பேச இந்தியாவில் ஒருத்தரும் கிடையாது. அதன் பிறகு தான் இந்திய அளவில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கான உரிமைக்கு அடித்தளமிட்டது திமுக.

எந்த மாநிலமும் இந்திய அளவில் அளிக்காத பொருளாதார சுதந்திரத்தை பெண்களுக்கு கொடுத்தது திமுக. மகளிர் உரிமைத்தொகையான ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நிலை அறியாமல், பெண்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள், எந்த அளவிற்கு இந்த பணம் உபயோகப்படுகிறது என தெரியாமல் பேசி இருக்கிறார் குஷ்பு. இதற்கு ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement