For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை தனியார் கல்லூரியில் #Onam கொண்டாட்டம்... ஹெலிகாப்டரில் இறங்கிய மகாபலி மன்னர்!

04:56 PM Sep 13, 2024 IST | Web Editor
கோவை தனியார் கல்லூரியில்  onam கொண்டாட்டம்    ஹெலிகாப்டரில் இறங்கிய மகாபலி மன்னர்
Advertisement

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில், மகாபலி மன்னர் ஹெலிகாப்டரில் வந்திறங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement

மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில்
ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓணம்
பண்டிகையின் முக்கியமான மன்னராக கருதப்பட கூடிய மகாபலி மன்னர் வேடமணிந்த
மாணவரை, ஹெலிகாப்டர் மூலம் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். இது அங்கிருந்த
மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் உற்சாகத்தை
ஏற்படுத்தியது. மேலும் பூ கோலமிட்டு மோகினி ஆட்டம், களறி ஆகியவற்றை நடைபெற்றன.

மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் ஓணம் சேலை, வேஷ்டி சட்டை, வண்ண
வண்ண புத்தாடை அணிந்து ஜமாப், சண்டைமேளம், சினிமா பாடல்களுக்கு உற்சாக நடனமாடி
ஓணம் பண்டிகையை கொண்டடினர்.

Tags :
Advertisement