Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மூதாட்டி கழுத்தறுத்து கொலை - 65 பவுன் தங்க நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்!

12:28 PM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை
செய்து 65 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

திருமங்கலம் அருகே வாகைக்குளம் மாயன் நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு
என்பவரது மனைவி காசம்மாள்(70). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் மகாராஷ்டிராவில் பணிபுரிந்து வருகின்றனர். மகள் பாண்டியம்மாள், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள ராஜம்பாடி
கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

இதனிடையே தங்கராசு விபத்து ஒன்றில் காயமடைந்ததால், மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். காசம்மாள் மட்டும் வாகைக்குளம் வீட்டில் தனியாக வசித்து
வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு காசம்மாள் தனது கணவர் தங்கராசுடன் பேசிவிட்டு தூங்க சென்றுள்ளார். தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் காசம்மாவை அழைத்துள்ளனர். வெகுநேரம் ஆகியும் எந்த சத்தமும் வராததால் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது ரத்த வெள்ளத்தில் குப்புற கவிழ்ந்த நிலையில் காசம்மாள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக சிந்துபட்டி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து திருமங்கலம் டிஎஸ்பி அருள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காசம்மாள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

மேலும் வீட்டில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார் கணவர் தங்கராசுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து தனது மகளுடன் வந்த தங்கராசு காசம்மாள் இறந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். பின் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட காசம்மாள் கழுத்தில் 15 பவுன் நகை அணிந்து இருந்ததாகவும், மேலும் பீரோவில் 50 பவுன் நகை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சார்லி வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.  சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி அரவிந்திற்க்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி அரவிந்த் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொலை சம்பவ குறித்து வழக்கு பதிவு செய்த சிந்துபட்டி போலீசார் இறந்த காசம்மாளின் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, 65 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
CrimeMaduraiMurderRobbery
Advertisement
Next Article