For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மின்சாரம் இல்லை...செல்போன் சிக்னல் இல்லை...வெள்ளத்தில் தவிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!

03:08 PM Dec 05, 2023 IST | Web Editor
மின்சாரம் இல்லை   செல்போன் சிக்னல் இல்லை   வெள்ளத்தில் தவிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையில் தனது வீட்டிற்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.  இது மட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளன.  அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: “ஒன்றிய அரசு வழங்கும் நிதியை பொறுத்து மழை நிவாரணம் வழங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

மிக்ஜாம் புயல் நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே,  பாபட்லாவிற்கு அருகே,  இன்று கரையை கடந்தது.

இந்த நிலையில் தனது வீட்டிற்கு உள்ளேயும் மழை வெள்ளம் புகுந்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது,

"எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.  காரப்பாக்கத்தில் தண்ணீர் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது.  உதவிக்கு அழைத்து உள்ளேன்.  மின்சாரம் இல்லை. வைஃபை இல்லை.  செல்போன் சிக்னல் இல்லை எதுவுமே இல்லை.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது.  எனக்கும் இங்கு இருக்கும் பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம்.  சென்னை முழுவதும் வாழும் மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement