முருக பக்தர்கள் மாநாடு - மதுரையில் குவியத் தொடங்கிய பக்தர்கள்!
இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சமயம் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து
இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டை ஒட்டி சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க வாகனங்களில் வருகை தருகின்றனர்.
அவர்களுக்கு வசதியாகவும், பொதுமக்கள் இடையூன்றி செல்வதற்காகவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த்தொட்டிகள், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், உடனடி சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்ட பாதுகாப்பிற்கு பின் மாநாட்டிற்கு வரும் நபர்கள் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு இன்று மதியம் தொடங்கப்பட உள்ள நிலையில் பக்தர்கள் தற்போதே குவியத் தொடங்கியுள்ளனர்.