For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும்" - சேலத்தில் நயன்தாரா பேச்சு.!

05:05 PM Jan 10, 2024 IST | Web Editor
 மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும்    சேலத்தில் நயன்தாரா பேச்சு
Advertisement

"பல பெண்களுக்கு இன்னும் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வே இல்லை. அவர்களும் விழிப்புணர்வு பெற அது குறித்து வெளிப்படையாக பேச வேண்டும்" என சேலத்தில் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமா உலகில் மிக முக்கியமான கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவை நயன்தாராவுக்கு முன் நயன்தாராவுக்கு பின் என பிரித்து விடலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் தமிழின் முன்னணி நாயகியாக இருக்கும் அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் பெண்களை கதையின் மையக்கருவாக வைத்து நிறைய படங்கள் வரத் தொடங்கின.

நயன்தாராவின் அறம் முதல் அன்னபூரணி வரை Female Lead Stories எனப்படும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் நைன் எனப்படும் அழகு சாதனப் பொருட்களின் நிறுவனத்தை தொடங்கினார். லிப்ஸ்டிக், பியூட்டி க்ரீம்க்ள், சானிட்டரி நேப்கின் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி அதற்கு விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் பெமி 9 (femi9) நிறுவனத்தின் வெற்றி விழாவில் நடிகை நயன் தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா தெரிவித்ததாவது..

” சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். இது சுயநலம் என்று தோன்றலாம்.  ஆனால் சுயநலத்துக்கு பின்னால் பொதுநலன் உள்ளது. பெண்கள் நன்றாக இருந்தால் ஒட்டுமொத்த சமூகமே நன்றாக இருக்கும்.

முன்பெல்லாம் சானிடரி நாப்கின் என பொதுவெளியில் சொல்வதற்கே தயங்கினோம். ஆனால் இப்போது தைரியமாக நாப்கின் பற்றி பொது வெளியில் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம் என கருதுகிறேன். பல பெண்களுக்கு இன்னும் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வே இல்லை. அவர்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளது போல; ரொம்ப சாதித்த பெண்களுக்கும், மிகவும் மகிழ்ச்சியாக உள்ள பெண்களுக்கும் பின்னாலும் கண்டிப்பா ஒரு ஆண் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எனது வெற்றிக்கு பின்னால் எனது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார். அவரை சந்தித்து முதலே ஒவ்வொரு முயற்சியிலும் அவர் எனக்கு துணையாக உள்ளார். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை என்றால் அதுதான் பெரிய விஷயம் என்று நான் ஆரம்பத்தில் நினைத்தேன் நினைத்தேன். ஆனால் ஒரு புது முயற்சியை நான் முன்னெடுக்கும்போது இதோடு ஏன் நிறுத்துகிறீர்கள் என கேட்பவர்தான் விக்னேஷ் சிவன்.” என நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement