For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#IndependenceDay | "இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாக்க வேண்டும்" - சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!

09:52 AM Aug 15, 2024 IST | Web Editor
 independenceday    இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாக்க வேண்டும்    சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை
Advertisement

உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். அவரை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.

கொடி ஏற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை போற்றுகிறேன். விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர போராட்ட வீரர்களை போல நாமும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள் போராடினர்.

தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. 140 கோடி இந்தியர்களும் ஒன்று சேர்ந்து தீவிரமாக உழைத்தால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாகும். இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு வருத்தம் அளிக்கிறது. இன்று அவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். இயற்கை பேரிடர்களால் உறவை இழந்தவர்களுக்கு தேச மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள்.

'ஜல் ஜீவன்' திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 15 கோடியை கடந்துள்ளது. பாதுகாப்புப் படைகள் துல்லிய தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தும்போது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறார். உலகளவில் இந்திய வங்கிகள் வலிமையானதாக மாறியுள்ளது. முன்னதாக மக்கள் வசதிகள் செய்து தரக் கோரி அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது, அவர்கள் வீடு தேடிச் சென்று தேவையானவை ஏற்பாடு செய்து தரப்படுகிறது."

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags :
Advertisement