For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Madurai மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

04:28 PM Oct 03, 2024 IST | Web Editor
 madurai மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
Advertisement

மூதாட்டியை தாக்கிய புகாரில் மதுரை மாநகராட்சி துணை மேயர், அவரது சகோதரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. 

Advertisement

மூதாட்டியை தாக்கிய புகாரில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2 ஆவது மெயின் ரோட்டில் வசந்தா எனும் மூதாட்டிக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, கடை உள்ளது. வசந்தாவிற்கு ஆண், பெண் என 6 பிள்ளைகள் உள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் வசந்தாவின் பெயரில் உள்ள சொத்தை ஈடாக பதிவு செய்து கொடுத்து குமார் என்பவரிடம் 10 லட்ச ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார்

மாதந்தோறும் கடனுக்கு வட்டி செலுத்திய நிலையில் 1 ஆண்டுக்கு முன் கடன் கொடுத்த குமார் என்பவர் கூடுதலாக 15 லட்ச ரூபாய் பெற்று கொண்டு கடனுக்காக சொத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு வசந்தா மறுப்பு தெரிவித்த நிலையில் குமார், துணை மேயரின் தம்பி ராஜேந்திரன் உள்ளிடோர் வசந்தா மற்றும் அவரது மகன் முருகானந்தம் ஆகியோரை தாக்கி உள்ளனர். இதயடுத்து துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags :
Advertisement