For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரை | மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுப்பதாக மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12:47 PM Jun 18, 2025 IST | Web Editor
கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுப்பதாக மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை   மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement

தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியது. இதனையடுத்து, கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Advertisement

இதையும் படியுங்கள் : ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதற்கிடையே, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் இன்று (ஜுன் 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பட்டது. அதன்படி, திமுக மாணவரணி தரப்பில் மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாணவரணிச் செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக மாணவரணியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமூடியை அணிந்தவாறும், கையில் ஏந்திவாறும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவரணி துணை செயலாளர் கா. அமுதரசன், திருச்சி சிவா உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு எதிராக மேடையில் பேசி வருகின்றனர்.

Tags :
Advertisement