For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தல்: காங். சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு!

03:07 PM Mar 18, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தல்  காங்  சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விருப்ப மனு படிவத்தை இன்று (மார்ச் 18) முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப்படிவங்களை 20.03.2024 மதியம் 1 மணிக்குள் கொடுக்க வேண்டும். மேலும் நாடாளுமன்ற பொதுத் தொகுதிகளுக்கு 30,000 ரூபாய், நாடாளுமன்ற தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் 15,000 ரூபாய், அதேபோல விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.10,000, மகளிருக்கு 5,000 ரூபாய் கட்சி நன்கொடையாக TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வங்கி வரைவோலையாக (Demand Draft Payable at Chennai) மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை Voter ID Card, Aadhar Card, Pan Card நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement