For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தல் 2024 - விசிக - விற்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

07:48 PM Mar 27, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தல் 2024   விசிக   விற்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
Advertisement

மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்  : கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த விவகாரம்! அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஏற்கெனவே கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பானை சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனால் இந்த முறையும் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், இந்த கோரிக்கை மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால், அதனை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்றே முடிவு எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement